Sunday, September 5, 2010

சூர்யா - கெளதம் எமி ஜாக்ஸ்ன் கூட்டணி

'வாரணம் ஆயிரம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணைகிறது கெளதம் வாசுதேவ் மேனன் - சூர்யா கூட்டணி.

சமீரா ரெட்டி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'நடுநிசி நாய்கள்' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கெளதவ் வாசுதேவ் மேனன், அதைத் தொடர்ந்து இந்தியில் 'விண்ணைத் தாண்டி வருவாயா'வை உருவாக்கவுள்ளார்.

நடிகர் அஜீத்தின் 50-வது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டச் சூழலில், இருவரும் பிரிந்தனர். அஜீத் தனது 50-வது படத்தை வெங்கட்பிரபு இயக்குவார் என அறிவித்தார்.

இதனால், கெளதவ் வாசுதேவ் மேனன் அடுத்து யாரை வைத்து அடுத்த படத்தை இயக்குவார் எனக் கவனிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது நண்பர் சூர்யாவை வைத்தே படத்தை இயக்குவது என முடிவு செய்திருக்கிறார், கெளதம்.

அஜீத், எந்த படத்தில் எல்லாம், 'நடிக்க மாட்டேன்' என்று சொல்லுகிறாரோ, அப்படங்கள் எல்லாம் சூர்யா நடித்து வெற்றிகளை குவித்திருக்கின்ற என்பது கோடம்பாக்க வரலாறு. 'காக்க காக்க', 'நந்தா', 'கஜினி' ஆகியவை இதற்கு நல்ல உதாரணங்கள்.

முன்னதாக, "நான் ஏன் அஜீத்துக்காக காத்திருக்க வேண்டும்?. எனது நண்பர்களான கமல், சூர்யாவுக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருப்பேன்," என்று சற்று காரமாகவே பேசினார், கெளதம்.

பதிலுக்கு அஜீத்தோ, "கௌதம் இயக்குனராகி பத்து வருடமாகிவிட்டது. நானும் 50-வது படத்தில் நடித்து வருகிறேன். அவர் என்னை மட்டுமே நம்பி இல்லை. நானும் அவரை மட்டுமே நம்பி இல்லை," என்றார்.

இப்படி நடந்தச் சொற்ப்போருக்கிடையே அஜீத் நடிப்பதாக கெளதம் வாசுதேவ் மேனன் தயார் செய்த 'துப்பறியும் ஆனந்த்' படத்தை, சூர்யாவை வைத்து இயக்க போகிறார் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள், கோடம்பாக்க நண்பர்கள்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம்...

அந்தப் படத்தில் கதாநாயகி வேடத்தில் நடிக்க பேச்சு நடப்பது, 'மதராஸப்பட்டினம்' புகழ் இங்கிலாந்து மாடலும் நடிகையுமான எமி ஜாக்ஸ்ன் உடன்!!!

அஜீத் ரொம்ப மிஸ் பண்ராறோ!?

Thanks to vikatan

No comments:

Post a Comment